உரையாடல் 18
கல்யாண ஊர்வலம்
ஜிம் - நான் நேற்றுக் காலையில் என் அறையிலிருந்து படித்துக்கொண்டிருந்-
தேன். அப்போது ஒரு கல்யாண ஊர்வலம் தெரு வழியாகப் போயிற்று.
இந்த ஒரு வாரத்தில் நான் இப்படி ஐந்தாறு ஊர்வலங்கள் பார்த்தேன்.
இதற்கு ஏதாவது காரணம் உண்டா?
ராஜா - ஆமா; உண்டு. எங்கள் நாட்டில் எல்லா மாதங்களிலும் கல்யாணம்
நடக்காது. சில மாதங்கள்தான் நல்ல மாதங்கள். சித்திரை அதில்
ஒன்று. கல்யாணம் மாதிரி நல்ல காரியங்கள் இந்த மாதிரி மாதங்களில்-
தான் நடக்கும்.
ஜிம் - வருஷம் பூராவிலும் சித்திரை ஒன்றுதான் நல்ல மாதமா?
ராஜா - இல்லை. வேறு நல்ல மாதங்களும் இருக்கின்றன. ஆனி, ஆவணி,
ஐப்பசி, தை எல்லாம் நல்ல மாதங்கள்தான்.
ஜிம் - இதே மாதிரி நல்ல நாள் இருக்கிறதா?
ராஜா - ஆமா. ஒவ்வொரு மாதத்திலும் சில நாள்தான் நல்ல நாள். அந்த
நல்ல நாளில் நல்ல நேரத்தில்தான் கல்யாணம் நடக்கும்.
ஜிம் - நான் இதைப் பற்றி முன்னால் புஸ்தகத்தில் படித்திருக்கிறேன். இப்போது-
தான் நேரில் பார்க்கிறேன்.
ராஜா - இந்த வெயிலில் ஊர்வலத்தில் நடந்து போக ரொம்ப கஷ்டமாக
இருக்கும். உங்களால் இந்த வெயிலைத் தாங்கிக்கொள்ள முடிகிறதா?
ஜிம் - கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் வீட்டுக்குள் அவ்வளவு மோசமாக
இல்லை.
ராஜா - ஒரு வேட்டி வாங்கிக்கொள்ளுங்கள். வெயில் காலத்தில் அது வசதியாக
இருக்கும்.
ஜிம் - நான் இரண்டு வேட்டிகள் வாங்கியிருகிறேன். வீட்டில் அதைத்தான்
கட்டியிருப்பேன். அதைக் கட்டிக்கொண்டு வெளியில் நடக்கப் பயமாக
இருக்கிறது.
ராஜா - என்ன பயம்?
ஜிம் - ஒரு நாள் வேட்டி கட்டிக்கொண்டு கொஞ்ச தூரம் நடந்து பார்த்தேன்.
அது நழுவிக் கீழே விழுந்துவிட்டது.
ராஜா - முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். பிறகு எல்லாம் சரியாகப் போய்விடும்.
ஜிம் - நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அதற்குள் வெயிலும் பழக்கம் ஆகி-
விடும். அடுத்த வருஷம் இவ்வளவு கஷ்டம் இருக்காது.