உரையாடல் 19
கல்யாணச் சாப்பாடு
ஜிம் - எங்கேயோ வெளியில் புறப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்போல் இருக்கிறது.
வெளியூருக்கா?
ராஜா - இல்லை. உள்ளூரில்தான் ஒரு கல்யாணத்துக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்-
கிறேன். நீங்களும் வருகிறீர்களா?
ஜிம் - அழைப்பு இல்லாமல் வரலாமா?
ராஜா - ஓ, தாராளமாக வரலாம். யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.
ஜிம் - இது யார் கல்யாணம்?
ராஜா - என் மனைவியின் பெரியம்மா மகன் கல்யாணம். அதனால் போயாக
வேண்டும்.
ஜிம் - பெண் இந்த ஊர்தானா?
ராஜா - ஆமா, பெண் வீட்டில்தான் கல்யாணம் நடக்கும்.
ஜிம் - உங்கள் மனைவி வரவில்லையா?
ராஜா - அவள் நேற்றே போய்விட்டாள். நாம் முதலில் மாப்பிள்ளை வீட்டுக்குப்
போய் பிறகு அங்கிருந்து ஊர்வலத்தோடு பெண் வீட்டுக்குப் போவோம்.
ஜிம் - மாப்பிள்ளை வீடு எங்கே இருக்கிறது?
ராஜா - இதோ வந்துவிட்டோம். காலைச் சாப்பாடு நடந்துகொண்டிருக்கிறது.
வாருங்கள். நாமும் சாப்பிட்டுவிடுவோம்.
ஜிம் - நான் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டேன். நீங்கள் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.
நான் இங்கே உட்கார்ந்திருக்கிறேன்.
ராஜா - கல்யாண வீட்டில் சாப்பிடாமல் போகக்கூடாது. இரண்டு இட்லி மட்டும்
சாப்பிட்டுவிட்டு எழுந்துவிடுங்கள்.
ஜிம் - சரி. உங்கள் ஆசையைக் கெடுப்பானேன்?
ராஜா - வயிறு நிறைய சாப்பிட்டாயிற்று. நீங்கள் வெற்றிலை போடுகிறீர்களா?
ஜிம் - எனக்குப் பழக்கம் இல்லை. நீங்கள் போடுங்கள். நான் பார்த்துக்கொண்-
டிருக்கிறேன்.
ராஜா - ஓ. ஊர்வலம் புறப்பட்டுவிட்டது. வாருங்கள். நாமும் அதோடு சேர்ந்து-
கொள்வோம்.
ஜிம் - இப்போது நேராகப் பெண் வீட்டுக்குத்தான் போகிறோமா?
ராஜா - ஆமா.
ஜிம் - அங்கே என்னவெல்லாம் நடக்கும்?
ராஜா - எல்லாம் விவரமாகச் சொல்கிறேன். வாருங்கள், பேசிக்கொண்டே
நடப்போம்.