உரையாடல் 20
எனக்கு வயிற்று வலி
ஜிம் - உங்களுக்குத் தெரிந்த டாக்டர் யாராவது பக்கத்தில் இருக்கிறாரா?
ராஜா - ஏன்? என்ன விஷயம்?
ஜிம் - நேற்றிலிருந்து லேசாக வயிறு வலித்துக்கொண்டிருக்கிறது.
ராஜா - கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டதனுடைய பலனா?
ஜிம் - சாப்பாடு காரமாக இருந்ததல்லவா? அதனால் இருக்கும். எனக்குக்
கரம் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை.
ராஜா - எனக்கு ரொம்ப வேண்டிய டாக்டர் ஒருவர் இருக்கிறார். அவர் அமெரிக்-
காவில் படித்தவர். வாருங்கள். அவரிடம் போவோம்.
ஜிம் - அவர் பக்கத்தில்தான் இருக்கிறாரா?
ராஜா - ஆமா. இந்தத் தெரு திரும்பியவுடன் அவருடைய ஆஸ்பத்திரி இருக்-
கிறது. நடந்தே போய்விடலாம்.
டாக்டர் - வாருங்கள், ராஜா. பார்த்து ரொம்ப நாள் ஆயிற்றே.
சௌக்கியமாக இருக்கிறீர்களா?
ராஜா - ஏதோ இருக்கிறேன், டாக்டர். இவர் என் நண்பர் ஜிம். அமெரிக்காவி-
லிருந்து இங்கே வந்திருக்கிறார். இவருக்கு உடம்பு சரியில்லை.
டாக்டர் - என்ன செய்கிறது?
ஜிம் - நேற்றிலிருந்து வயிறு வலிக்கிறது. கடையில் விற்கும் வயிற்றுவலி
மருந்தை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தேன். கேட்கவில்லை.
டாக்டர் - டாக்டரைக் கேட்காமல் கண்ட மருந்தையும் வாங்கிச் சாப்பிடுவது
நல்லது இல்லை. நீங்கள் இங்கே வந்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன?
ஜிம் - ஒரு வருஷம் ஆகப் போகிறது.
டாக்டர் - நேற்று புதிதாக ஏதாவது சாப்பிட்டீர்களா?
ஜிம் - ஒரு கல்யாண வீட்டில் காரமாகச் சாப்பிட்டேன்.
டாக்டர் - ஓ. அதுதான் விஷயம். நான் ஒரு மருந்து எழுதிக் கொடுக்கிறேன்.
அதை வாங்கிச் சாப்பிடுங்கள். ஒரே நாளில் சரியாகப் போய்விடும்.
ஜிம் - இதற்குப் பணம் எவ்வளவு, டாக்டர்?
டாக்டர் - ஓ, பரவாயில்லை. நான்தான் மருந்து கொடுக்கவில்லையே! அதோடு
ராஜா கூட்டிக்கொண்டு வந்ததால் ஒன்றும் வாங்கிக்கொள்ளமாட்டேன்.
ராஜா - சரி, டாக்டர். நாங்கள் போய்விட்டு வருகிறோம்.