உரையாடல் 21
பொங்கலுக்குப் போவோமா?
ராஜா - இப்போது உங்கள் வயிற்றுவலி எப்படி இருக்கிறது?
ஜிம் - டாக்டர் கொடுத்த மருந்தைச் சாப்பிட்டதும் சரியாகப் போய்விட்டது.
ராஜா - நாம் டாக்டரிடம் போனது நல்லதாகப்போயிற்று. அவர் கொடுக்கிற
மருந்து எப்போதும் நன்றாகக் கேட்கும்.
ஜிம் - சில பேர் பழக்கத்தினால் வியாதியைப் பற்றிச் சொன்னவுடனே நன்றாகப்
புரிந்துகொண்டு மருந்து கொடுப்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கி-
றார்கள்.
ராஜா - இப்போது உங்களுக்கு உடம்புக்கு நன்றாக இருப்பதனால் வெளி-
யூருக்குப் போவதில் கஷ்டம் இருக்காதே?
ஜிம் - ஆமா, என்ன விஷயம்?
ராஜா - நீங்கள் மாரியம்மன் பொங்கலுக்கு போனதுண்டா?
ஜிம் - போனதில்லை. ஆனால் போவதற்கு ரொம்ப நாட்களாக ஆசை.
ராஜா - எங்கள் ஊரில் இப்போது பொங்கல் நடந்துகொண்டிருக்கிறது. நான்
இன்று சாயங்காலம் புறப்பட்டுப் போகிறேன். நீங்களும் வருகிறீர்களா?
ஜிம் - எனக்கு வருவதற்கு ரொம்ப ஆசைதான். ஆனால் நான் அங்கே தங்கு-
வதற்கு என்ன செய்வது?
ராஜா - அதற்கு நீங்கள் கவலைப்படாதீகள். எங்கள் பழைய வீடு ஒன்று அங்கே
இருக்கிறது. அங்கேயே நாம் தங்கிக்கொள்ளலாம்.
ஜிம் - ரொம்ப நல்லதாகப் போய்விட்டது. நான் ரொம்ப நாளாக நினைத்துக்
கொண்டிருந்தது இப்போதுதான் முடியப் போகிறது.
ராஜா - அந்த வீட்டில் ஒரே ஒரு கஷ்டம் இருக்கிறது. அங்கே குளிப்பதற்குத்
தனி இடம் கிடையாது. தோட்டத்தில் கிணற்றடியில் நின்று குளிக்க
வேண்டியதிருக்கும்.
ஜிம் - அதனால் என்ன? எனக்கு அதில் ஒரு கஷ்டமும் இல்லை.
ராஜா - அப்படியானால் சரியாக நான்கு மணிக்கு வந்துவிடுங்கள். இங்கேயிருந்து
ஒன்றாக பஸ் புறப்படும் இடத்துக்குப் போய், அங்கேயிருந்து ஊருக்குப்
போவோம். நான் பஸ்ஸில் உங்களுக்குப் பொங்கலைப் பற்றிச் சொல்லிக்-
கொண்டு வருகிறேன்.
ஜிம் - இதைக் கேட்கும்போதே குஷியாக இருக்கிறது. நான் நிச்சயமாக நான்கு
மணிக்கு வந்துவிடுகிறேன்.