உரையாடல் 22
தீயில் எப்படி நடக்கிறார்கள்?
ராஜா - என்ன! நேற்று பூராவும் ஆளையே காணோம்.
ஜிம் - பொங்கலில் இரண்டு நாட்கள் சரியாகத் தூங்காததனால் நேற்றுப் பூராவும்
தூக்கம் தூக்கமாக வந்தது. பகல் பூராவும் தூங்கினேன்.
ராஜா - நானும் அப்படித்தான். நேற்றுக் காலையில் சாப்பிட்டுவிட்டுப் பத்து
மணிக்குப் படுத்தவன் சாயங்காலம் ஆறு மணிக்குத்தான் எழுந்திருந்தேன்.
மத்தியானம் சாப்பிடக்கூட இல்லை.
ஜிம் - முந்தா நாள் விடிய விடிய விழித்திருந்தது வீணாகப் போகவில்லை.
வெறும் காலோடு தீயில் நடப்பது எனக்கு இன்னும் ஆச்சரியமாக
இருக்கிறது. இதில் ஏதாவது ஏமாற்று இருக்குமோ?
ராஜா - இல்லை. இதற்கு நம்பிக்கைதான் காரணம். தீ மிதிப்பதற்கு ஒரு மாதத்-
துக்கு முன்னாலிருந்து இரண்டு வேளை சாப்பிடாமல் இருப்பதும் இதற்கு
ஒரு காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணம் காலை அழுத்த-
மாகப் பதிக்காமல் வேகமாக ஓடுவதாக இருக்கலாம்.
ஜிம் - ஒரு அம்மா மெதுவாக நடந்து போனார்களே.
ராஜா - ஆமா. நான் ஒரு தடவை ஒரு ஆள் கங்கை வாரித் தலையில் போட்டுக்-
கொண்டதைப் பார்த்திருக்கிறேன். இதில் சில பேருக்குக் கால்
புண்ணாகப் போனதும் தெரியும்.
ஜிம் - அப்போது கடவுள் மேல் நம்பிக்கை வைத்துச் செய்வதனால் இதெல்லாம்
முடிகிறது, இல்லையா?
ராஜா - அப்படிச் சொல்வதற்கு இல்லை. கடவுளை நம்பாதவர்கள்கூட கருப்புக்
கொடி பிடித்துக்கொண்டு தீக் குழியில் இறங்கிப் போயிருக்கிறார்கள்.
இவர்களுக்கு வேறு ஒரு நம்ப்பிக்கை. மனிதனுக்கு வாழ்க்கையில் ஒரு
நம்பிக்கை வேண்டும். அது இருந்தால் அவன் எதுவும் செய்வான்.
ஜிம் - உண்மைதான்.