உரையாடல் 23
ஒரே குஷி
ராஜா - இன்றைக்கு என்ன ஒரே குஷியாக இருக்கிறீர்கள்?
ஜிம் - வீட்டிலிருந்து கடிதம் வந்தது. அதனால்தான்.
ராஜா - அப்பா, அம்மா சுகமாக இருக்கிறார்களா? என்ன எழுதியிருக்கிறார்கள்?
ஜிம் - நாம் பொங்கலுக்குப் போனதையும் அங்கே பார்த்ததையும் பற்றி நான்
அப்பவுக்கு எழுதியிருந்தேன். அதைப் பார்த்து அவருக்கும் ஒரே
ஆச்சரியம்.
ராஜா - நேரில் பார்த்தால் இன்னும் ஆச்சரியப்படுவார்.
ஜிம் - நான் எடுத்த படங்களை அவருக்கு அனுப்பியிருந்தேன். அதனால்
ஓரளவுக்கு நேரில் பார்ப்பதைப்போல் இருந்திருக்கும்.
ராஜா - என்ன இருந்தாலும் நேரில் பார்ப்பது மாதிரி இருக்காது, இல்லையா?
அவரை ஒரு தடவை இங்கே வரச் சொல்லி எழுதுங்களேன்.
ஜிம் - அவர் எங்கே வரப் போகிறார்? அவர் இங்கே வந்துவிட்டால் அங்கே அவர்
வேலையைப் பார்த்துக்கொள்வதற்கு யாரும் இல்லை.
ராஜா - ஆமா. பொறுப்பான வேலையில் இருந்தால் இப்படித்தான். திடீரென்று
விட்டுவிட்டு வர முடியாது. முன்னாலேயே திட்டம் போட்டு லீவு எடுத்துக்-
கொண்டு வந்தால் என்ன?
ஜிம் - நானும் ஒவ்வொரு கடிதத்திலும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.
அவர் அசைவதாக இல்லை.
ராஜா - நீங்கள் எப்போது திரும்பிப் போவதாக இருக்கிறீர்கள்?
ஜிம் - சீக்கிரமே போக வேண்டியதாக இருக்கும். வந்து ஒரு வருஷம் முடியப்-
போகிறதல்லவா?
ராஜா - ஒரு வருஷத்தில் திரும்புவதென்றால் கஷ்டமாகத்தான் இருக்கும். நீங்கள்
விரும்பினாலும் ஒரு வருஷத்துக்கு மேல் இருக்க முடியாதா?
ஜிம் - ஒரு வருஷத்துக்கு மேல் இருக்க வேண்டும் என்றால் நான் அங்கே வேலை-
பார்த்த இடத்திலிருந்து ஸ்பெஷலாக அனுமதி வாங்க வேண்டும். நான்
இங்கே இருந்தேன் என்றால் அங்கே என்னுடைய வேலை கெடும்.
அதனால் போவதற்குப் பிடிக்காவிட்டாலும் போவதுதான் நல்லது என்று
இருக்கிறேன்.