உரையாடல் 25
போய்விட்டு வருகிறேன்
ராஜா - வாருங்கள், வாருங்கள். நீங்கல் வருவதற்காகத்தான் காத்துக்கொண்டி-
ருக்கிறோம். சாப்பாடெல்லாம் அப்போதே தயார் ஆகிவிட்டது.
ஜிம் - நான் சரியாக நேரத்துக்கு வந்துவிட்டேனே!
ராஜா - நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். சாப்பாடு போடச்
சொல்லட்டும?
ஜிம் - உங்கள் இஷ்டம். இப்போது சாப்பிடுவதென்றாலும் சாப்பிடுவோம், இல்லை.
கொஞ்ச நேரம் கழித்துச் சாப்பிடுவோம் என்றாலும் சரி. எனக்கு எல்லாம்
ஒன்றுதான்.
ராஜா - அப்படியானால் சாப்பிட ஆரம்பிக்க வேண்டியதுதான். ராணி, இலை
போட்டு சாப்பாடு எடுத்து வை. நாங்கள் கால், கை கழுவிக்கொண்டு
வருகிறோம்.
ஜிம் - இன்று நிஜமாகவே பெரிய விருந்துதான் போலும். ஏற்பாடெல்லாம் தட-
புடலாக இருக்கிறதே.
ராஜா - சாப்பிட்டுவிட்டு, பிறகு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.
ஜிம் - ராணியின் சமையல் என்றால் கேட்க வேண்டியதில்லை. எல்லாம் பிரமாத-
மாக இருக்கிறது. எனக்கு வயிற்றில்தான் இடம் இல்லை சாப்பிடுவதற்கு.
ராஜா - (ராணியிடம்) தமிழ்நாடு என்றால் இவ்வளவு பிடிக்கிறதே, இன்னும்
கொஞ்ச நாள் இருந்துவிட்டுப் போங்கள் என்றால் கேட்கமாட்டேன்
என்கிறார்.
ராணி - அவர்களுடைய ஊருக்குப் போக வேண்டும், ஆட்களைப் பார்க்க
வேண்டும் என்று அவருக்கு ஆசை இருக்காதா? நீங்கள் இப்படி
இதையெல்லாம் விட்டுவிட்டு எங்கேயாவது போய் வருஷக் கணக்கில்
இருப்பீர்களாக்கும்.
ராஜா - நானாவது போகிறதாவது! இட்டிலி, தோசை இல்லாமல் என்னால் ஒரு
வாரம்கூட இருக்க முடியாதே.
இளங்கோ - நான் இருப்பேன், அப்பா. நான் ஜிம் சித்தப்பாவுடன் அமெரிக்கா-
வுக்குப் போகட்டுமா, அப்பா?
ராஜா - படித்துப் பெரியவன் ஆனபிறகு நீயாகப் போ.
இளங்கோ - சரி அப்பா. இப்போதிருந்தே நன்றாகப் படிக்கிறேன்.
ராஜா - ஜிம், சாப்பிட்டு முடித்ததும் இவனுக்குப் பள்ளிக்கூடத்தில் டீச்சர் சொல்-
லிக் கொடுத்த கதைகளைக் கேட்கிறீர்களா? அழகாகச் சொல்லுவான்.
ஜிம் - ஓ, எனக்குத் தெரியுமே, இளங்கோ கெட்டிக்காரன் என்று. உனக்குத்
தெரிந்த எல்லால் கதைகளையும் எனக்குச் சொல்ல வேண்டும், என்ன?
இளங்கோ - ஓ, எனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்கிறேன்.