25. தாகம்

                                                                              25. தாகம்

 

அவனுக்கு வருத்தமும் குழப்பமும் ஏற்பட்டன.  அவன் தன் காதலியைப் பார்த்து நான்கு நாட்கள் ஆயிற்று.  அதுதான் அவனுடைய வருத்தத்துக்கும் குழப்பத்துக்கும் காரணம்.  நான்கு நாட்களுக்கு முன்புவரை அவர்கள் தினந்தோறும் சந்தித்து வந்தார்கள்.

 

அவனுக்கும் அவளுக்கும் நெடுநாள் உறவு.  அவர்கள் இருவரும் சிறுபிள்ளைகளாய் இருந்த காலத்திலேயே பழக்கம் ஏற்பட்டது.  அவள் தெரு மணலில் வீடு கட்டி விளையாடுவாள்.  அவன் அந்த வழியாக வருவான்.  “என்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்” என்று சொல்வான்.  அவள் “மாட்டேன்” என்பாள்.  அவள் ஆசையோடு கட்டின வீட்டை அவன் தன் காலால் சிதைப்பான்.  சில சமயம் அவள் பந்து விளையாடுவாள்.  அவன் பந்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவான்.  இப்படித் தொடங்கிய அவர்களுடைய நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.  இருவரும் இளம் பருவத்தை அடைந்தார்கள்.  அவர்கள் தனிமையில் சந்தித்தார்கள்.  தங்கள் சந்திப்பு மற்றவர்களுக்குத் தெரியாது என்று அவர்கள் நினைத்தார்கள்.  ஆனால் எப்படியோ அவளுடைய அம்மாவுக்குத் தெரிந்துவிட்டது.  பெற்றவள் சும்மா இருப்பாளா?  “வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது” என்று மகளைக் கட்டுப்படுத்தினாள்.  அதனால்தான் அவள் அவனைச் சந்திக்க முடியவில்லை.

 

அவன் அவளைச் சந்திக்கத் துடித்தான்.  அவளுடைய வீட்டுக்கு முன்னால் நின்றான்.  “அம்மா! தாயே! தாகமாய் இருக்கிறது.  கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்” என்று சொன்னான்.  அம்மா சமைத்துக்கொண்டிருந்தாள்.  வெளியே நிற்பவன் யார் என்று அவளுக்குத் தெரியாது.  “பாவம்!  செம்பில் தண்ணீர் கொண்டுபோ!  அவனுடைய கையில் ஊற்றிவிட்டு வா” என்று மகளிடம் சொன்னாள்.

 

மகள் வாசலுக்கு வந்ததும் காதலனைப் பார்த்தாள்.  அவளுக்கு மகிழ்ச்சியும் பயமும் ஏற்பட்டன.  அவள் தன் மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.  “கையை நீட்டு.  தண்ணீர் ஊற்றுகிறேன்” என்று சொன்னாள்.  அவன் அவளூடைய கைகளைப் பிடித்தான்.  அவனுடைய பிடியில் கண்ணாடி வளையல் உடைந்தது.  உடைந்த துண்டு அவளுடைய கையைக் குத்திற்று.  அவள் “அம்மா” என்று அலறினாள்.  தாய் பதறி வாசலுக்கு ஓடி வந்தாள்.  “என்ன நடந்தது?” என்று கேட்டாள்.  மகள் சமாளித்துக்கொண்டாள்.  “தண்ணீர் குடிக்கும்போது இவனுக்கு விக்கல் எடுக்கிறது” என்று சொன்னாள்.  “விக்கல் எடுத்தால் முதுகைத் தடவிவிட வேண்டும்.  அலறினால் என்ன பயன்?” என்று தாய் சொன்னாள்.  தாய் அவனுடைய முதுகைத் தடவிவிடத் தொடங்கினாள்.  அவன் சிரித்தான்.  தன் காதலியைக் கடைக்கண்ணால் பார்த்தான்.  அந்தப் பார்வை அவளைக் கொன்றுவிடும் போல் இருந்தது.

 

Glossary

 

வருத்தம்                                                     sorrow

குழப்பம்                                                      confusion

காதலி                                                          fiancée

தினந்தோறும்                                           every day

சந்தி (சந்திக்க, சந்தித்து)                      meet

நெடுநாள்                                                    for a long time

உறவு                                                          relationship

பழக்கம்                                                     acquaintance

தெரு                                                            street

விளையாடு (விளையாட, விளையாடி)  play

சேர் (சேர்க்க, சேர்த்து)                          join

சிதை (சிதைக்க, சிதைத்து)               destroy

பந்து                                                            ball

தொடங்கு (தொடங்க, தொடங்க)   start, begin

வளர் (வளர, வளர்ந்து)                        grow

இளம்பருவம்                                         young age

அடை (அடைய, அடைந்து)               reach

தனிமை                                                     privately

சந்திப்பு                                                      meeting

மற்றவர்கள்                                            others

நினை (நினைக்க, நினைத்து)          think

பெற்றவள்                                              mother, one who gave birth to

சும்மா இரு (இருக்க, இருந்து)      be quiet

கட்டுப்படுத்து (கட்டுப்படுத்த, கட்டுப்படுத்தி)   control

துடி (துடிக்க, துடித்து)                        be anxious

தாகம்                                                        thirst

சமை (சமைக்க, சமைத்து)             cook

செம்பு                                                      small pot

ஊற்று (ஊற்ற, ஊற்றி)                      pour

வாசல்                                                     door step

காதலன்                                                 lover

மகிழ்ச்சி                                                 happiness

மனம்                                                       mind

பிடி (பிடிக்க, பிடித்து)                        hold

கண்ணாடி                                             glass

வளையல்                                             bangles

உடை  (உடைய, உடைந்து)          break

துண்டு                                                   piece

சமாளி  (சமாளிக்க, சமாளித்து) manage

குடி  (குடிக்க, குடித்து)                      drink

விக்கல்                                                  hiccup

முதுகு                                                   back

தடவு  (தடவ, தடவி)                        rub

பயன்                                                      use

சிரி  (சிரிக்க, சிரித்து)                      laugh

கடைக்கண்                                        corner of the eye

பார்வை                                                look

 

This story is drawn from கலித்தொகை, one of the eight anthologies of poems written in the Sangam period, which covers a couple of centuries before and after the Common Era. The poems in this particular anthology belong to the later part of this period. They are written in the poetic meter called கலிப்பா. Unlike the other anthologies, the poems have a structure of a dialogue. Sangam poems are classified into two major divisions called அகம், the interior and புறம், the exterior. The poems in the former division are on emotions of relationship between man and woman and they are expressed namelessly; the poems in the latter division are on actions and thoughts of kings and poets and they are particularized. The அகம் poems are classified around five themes named after five landscapes which are metaphors for the different facets of the relationship and their emotional states. They are குறிஞ்சி ‘hills’, where the pre-marital meeting and union are placed, முல்லை ‘dry farm land’, where home scenes after marriage are placed, நெய்தல் ‘seaside’, where anxieties of uncertainties of the relationship are placed, மருதம் ‘river side’ where bickering and betrayals are placed and பாலை ‘barren land’, where hardships of separation are placed. The poem for this story belongs to குறிஞ்சி and is said to have been written by கபிலர், who is acclaimed to be the master of this class of poems.

 

51.
What she said to her friend

 

சுடர்த் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும்

மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய

கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி

நோ தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள்

அன்னையும் நானும் இருந்தேமா இல்லிரே

உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை

அடர் பொன் சிரகத்தால் வாக்கி சுடரிழாய்

உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும்

தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை

வளை முன் கை பற்றி நலிய தெருமந்திட்டு

அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா

அன்னை அலறிப் படர்தர தன்னை யான்

உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும்

தன்னைப் புறம்பு அழித்து நீவ மற்று என்னைக்

கடைக்கணால் கொல்வான் போல் நோக்கி நகைக் கூட்டம்

செய்தான் அக் கள்வன் மகன்.

 

Glossary

சுடர்   ஒளிவிடு      shining (the verb shine modifies the following noun)

தொடி  வளையல்      bangle, as a metonymy, refers to the girl wearing it

தொடீஇ     Final vowel is lengthened when calling someone

கேளாய்     கேள்     –ஆய் is the imperative suffix

ஆடு     விளையாடு    play

மணல்     sand

சிற்றில் = சிறு + இல்     சின்ன வீடு  doll house

காலின்      காலால்

சிதையா = சிதைத்து     அழித்து     destroying       

அடைச்சிய    அடைத்துக் கட்டிய    tightly (strung)

கோதை     சரம்    flower string

பரி        அறு     snap

வரிப் பந்து      ball with lines (of thread)

கொள்  எடுத்துக்கொள்     take hold

நோ தக்க    (mischief) that are hurtful

சிறு     சிறிய, சின்ன

பட்டி  mischievous boy

மேல்     earlier

அன்னை    அம்மா

இல்லீரே       Hey, those in the house.  –ஏ is used for addressing someone

உண்ணு நீர்    குடி தண்ணீர்   drinking water

வேட்டேன் want(ed).   From the verb வேள் ‘want’ from which comes வேண்டும்

என     என்று

வந்தாற்கு  (வந்தான்+க்கு)      வந்தவனுக்கு

அடர்       solid

பொன்        தங்கம்     gold

சிரகம்       சொம்பு     pot

வாக்கி     வார்த்து     having scooped

சுடரிழாய்     (you) with shiny hair.  இழை hair, also chain;  –ஆய் is used to address someone

ஊட்டு     feed

என     என்று சொல்ல    as (she) said

யான்    நான்

தன்னை      அவனை     தான் = அவன்

அறியாது      அறியாமல், தெரியாமல்

செல்     போ

மற்று       then

வளை       வளையல்   bangle

முன் கை    front arm, hand

பற்று    hold

நலிய    to squeeze

தெருமந்திட்டு     பயந்து

அன்னாய்     அன்னை + ஆய்

இவன் ஒருவன்    this unusual one

காண்     பார்

அலறு    scream

படர்தர    as (she) rushed

விக்கு    hiccup (v)

புறம்பு    முதுகு

அழித்து   rubbing

நீவ     as (she) massaged

கடைக்கணால் = கடைக்கண்ணால்   ஓரக்கண்ணால் with the corner of (his) eye

கொல்    kill

நோக்கு   பார்

நகைக்கூட்டம்   union through smile;  நகை smile,  கூடு unite

கள்வன்    thief

மகன்   son

 

Exercise

Rewrite the poem in modern Tamil as a dialog.