உரையாடல் 14
நேரம் ஆயிற்று
ராஜா - நீங்கள் நேற்று எத்தனை மணிக்கு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தீர்கள்?
ஜிம் - வீட்டுக்குப் போய்ச் சேர எட்டு மணி ஆயிற்று.
ராஜா - ஏன் அவ்வளவு நேரம் ஆயிற்று?
ஜிம் - ஆட்டோக்காரன் காக்கிச் சட்டை போடவில்லை. வழியில் போலீஸ்காரர்
தடுத்து நிறுத்தி அபராதம் கட்டச் சொன்னார்.
ராஜா - பிறகு?
ஜிம் - ஆட்டோக்காரன் ஒரு தடவை மன்னிக்கச் சொல்லிக் கெஞ்சினான்.
இதில் கொஞ்ச நேரம் போயிற்று. பிறகு குதிரையால் பாலத்தின்மேல்
வேகமாக ஏறிப்போக முடியவில்லை.
ராஜா - இப்போது பஸ்ஸிலேயா வந்தீர்கள்?
ஜிம் - இல்லை. சாயங்காலம் பஸ்ஸில் ரொம்பக் கூட்டமாக இருக்கும்.
பஸ்ஸுக்காகக் காத்து நின்று அதில் இடம் கிடைத்து வர ரொம்ப
நேரம் ஆகும். அதனால் நடந்தே வந்தேன்.
ராஜா - நான் இன்றைக்குக் காலையில் அந்தப் பக்கம் ஒரு வேலையாக வந்தேன்.
உங்கள் அறைக்கு வந்து பார்த்தேன். உங்களைக் காணோம்.
ஜிம் - அடடா! காலையில் பத்து மணி வரைக்கும் நான் பக்கத்து அறையில்
இருந்தேன். ஏதாவது முக்கியமான விஷயமா?
ராஜ - ஒன்றும் இல்லை. சும்மா பார்க்க வந்தேன்.
ஜிம் - நான் உங்களிடம் ஒன்று கேட்க வந்தேன். நம் பேச்சு சுவாரஸ்யத்தில்
அதைக் கேட்க மறந்தே போனேன்.
ராஜா - அதனால் என்ன? இப்போது கேளுங்களேன்.